Sunday, February 17, 2013

பிஸ்சா பர்கர்..அப்பறம் நம்ம சோளம்......

                  
  எங்கோ படித்தது...

 அமெரிக்காவில் இருந்து ஒரு கம்பெனி நம்மூரில் வந்து, பர்கர் மாமா, பர்கர் மச்சான், மஹாராஜா பேரன் -னு பெயரை மாத்திகிட்டு கடையை விரிச்சி கல்லா கட்டிகிட்டு இருக்காங்க. ஆனா... அந்தக் கருமங்களை இங்கிருந்து ஏன் துரத்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு அடுத்த முறை.. அந்த சுத்த பத்தமான வெஜ்/நான் வெஜ் பர்கர் கடிக்கும் போது கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.


ஒரு ஆரோக்கியமான மனிதன், தினம் மூன்று வேளை-ன்னு ஒரேயொரு மாதத்திற்கு மட்டும் McDonald's -ல் இருந்து சாப்பிட.. முதல் 5-10 நாளிலேயே... அவரை டெஸ்ட் செய்யும் டாக்டர்கள் எல்லாம் அரண்டு போவது போல, அவர் உடலில் மாற்றங்கள் ஏற்பட..., அதற்கடுத்த 10 நாளில்... அத்தனை டாக்டர்களும்.. அவரை கெஞ்சவே ஆரம்பிச்சிடுவாங்க. அந்த முப்பது நாட்களில்..கிட்டத்தட்ட அபாய எல்லையை எல்லாம் தாண்டுமளவுக்கு, தன் உடலில் மாற்றத்தைப் பார்ப்பார். அவர் செக்ஸ் வாழ்க்கை உட்பட!!! (இதைச் சொன்னாதானே... பயப்படுவீங்க)


இந்தியாவில் எந்த மூலையில் போய்.. McDonald's / Burger King பர்கரை கடிச்சாலும்.. ஒரே டேஸ்ட்தான். நம் நாட்டை விட மூணு மடங்கு பெரிய நாடு... மூலைக்கு மூலை.. இந்த புற்றீசல்கள் இருக்கும் அமெரிக்காவிலும்.. இதே போல.. ‘ஒரே தேசம்... ஒரே டேஸ்ட்’ -தான்.
இந்த ஒரே டேஸ்ட் எப்படி... ஒட்டு மொத்த நாட்டிற்கும் கிடைக்குது? 

முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?

 ஒவ்வொரு முறையும் என் மகளும், மகனும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க??

இந்த சீப் ஃபுட்-டின் சோர்ஸ் என்ன??????????????????

இதையெல்லாம் தெரிஞ்சிக்க.... நாம இன்னொரு விஷயத்தை தேடிப் போகணும். 1970-களில் அமெரிக்காவில் நடந்த விவசாயப் புரட்சி. நம்மூரில் வெகு சாதாரண விசயமாகக் கருதும் ஒரு மேட்டர். ஆனால்... அது ஒவ்வொரு அமெரிக்கனின் தலைமுடி வரைக்கும் பரவியிருக்குன்னா நம்புவீங்களா???
ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்



1970-களில் விவசாயப் புரட்சிங்கற பெயரில்... அரசாங்கம்.. விவசாயிகளை சோளம் பயிரிட சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதற்காக.. உங்களுக்கு தேவையோ.. இல்லையோ... ஒவ்வொரு ஏக்கருக்கும்... இத்தனை டாலர்ன்னு மானியம் கிடைக்க ஆரம்பிக்குது.




மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்... தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்... பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு. 


சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்... அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்... சோளத்தின்.. இன்னொரு சிறப்பு.......

......அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா... வாடா.... அத்தனையிலும் இருப்பது... சோளம் மட்டும்தான்!!


மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா...., பர்கர், சோடா... அவ்வளவு ஏன்.... உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.

அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்... உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா...., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்... கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???

ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே... சீக்கு பிடிச்சித் திரியும் போது... நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??

ஒரு ஹிடன் கேமராவில்..., இப்படி... நோயில் இறந்தக் கோழிகளைக் கூட... இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு... அதிலிருந்து... இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது..., இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்.. ஜம்முன்னு... இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.

இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு..., அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல..., அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி... சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க. 


நெசமா.. சொல்லுங்க.... நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????

Sunday, December 2, 2012

ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு

                  சந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம -  அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாம  ஒரு முழு நீல வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை படம் இந்த காலத்தில் தரமுடியுமா ?
              
                முடியும் என்று அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்"   இயக்குனர் பாலாஜி தரநீதரன்.




                       ஹீரோ பேருதாங்க "விஜய்" சேதுபதி - ஆனா நல்லா நடிக்கறாரு - இவருக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் - ப்ரெண்ட்ஸ் கூட சேந்து சும்மா இல்லாம இல்லாம கிரிக்கட் விளையாட போறாங்க..அப்ப என்னாச்சின்னா பால் பிடிக்க போய் தடுக்கி விழுந்த ஹீரோ மண்டைல அடிபட்டு கடந்த ஒரு வருசமா நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்து போய்டுது. தன்னோட கல்யாணத்தையும் .சேத்து .

                எப்டி நண்பர்கள் குழு இவருக்கு வீட்ல யாருக்கும் இப்டி நடந்ததத சொல்லாம கல்யாணம் பண்ணி வைக்கறாங்க - இதான் கதை.


             கத்தி மேல் நடக்கும் திரைகதை - கொஞ்சம்  பிசகினாலும் ஒரு உலக தரம் வாய்ந்த மொக்கை படமாக அமைந்த்துவிடகூடிய சாத்தியகூறுகள் ஏராளம். ஆனாலும் தனது இயல்பான திரைகதையினால் இயக்குனர் அசத்தியிருக்கிறார்.. விஜய் மறதி காரணமா பல வசனங்கள திரும்ப திரும்ப பேச வேண்டிய அவசியம்.ஒவ்வொரு முறையும் அவர் அதே வசனத்த பேசும்போது சிரிப்பலை கூடிகொண்டே போவதே இதற்கு சாட்சி..

               படத்தில் இவருக்கு நண்பர்களாக வரும் "பக்ஸ்", "பஜ்ஜி" மற்றும் "சரஸ்" - இவர்கள் தான் தூண்..இந்த ஞாபகி மறதி பேசன்ட்ட வச்சிட்டு அவங்க அடிக்கற லூட்டிதான் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை "நான்- ஸ்டாப்"  கலக்கல் காமடி . இதில் நடிப்பில் கலக்கிஇருக்கும் பஜ்ஜி மற்றும் பக்ஸ் இனி நிறைய படத்துல பாக்கலாம்.


             படத்தின் ஹைலைட் - வசனம் - இயல்பான நடிப்பு - குறிப்பா அந்த கல்யாண மண்டப காட்ச்சியில் - நாளைக்கு தாலி கட்டபோகும் மனைவிய பாத்துட்டு நண்பரிடம் "ப்பா, யாரடா இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு" என்று கேக்கும் இடத்தில் தியேட்டரே அலறுது...

           பின்னணி இசையும் - ஒளிபதிவும் - படத்துக்கு தேவையானவற்றை நிறைவா கொடுத்திருக்கு.கதைக்கு தேவையில்லாததால் பாடல் இல்லாதது ப்ளஸ்..

          ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பை தந்தாலும் - இது மாறி ஒரு காமடி படம் மீண்டும் வர பல நாட்கள் .காத்திருக்கணும் ..அதனால் மிஸ் பண்ணாம பாருங்க..



Saturday, November 3, 2012

விளம்பரங்களின் வில்லத்தனம் !

           அடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு..
           டேய், தில்லான மோகனாம்பாள்  படம் பாத்துருக்கயா ?
           இல்ல ..
          சிவாஜியையும் பத்மினியையும்நேர்ல பாத்துருக்கயா ?
          இல்ல
         அப்பறம் எத வச்சிடா இந்த மூஞ்சி சிவாஜி, அந்த மூஞ்சி பத்மினின்னு சொன்ன ? சொல்றா ..
           இவருதான் சொல்ல சொன்னாரு, ஆட்டம் நடக்குற ஊருக்கெல்லாம் வா, பத்து பத்து ரூவா தரேன், இந்த மாதிரி புகழ்ந்து பேசு, அதுவும் அந்த தவுளுகாரன் காதுல விழறமாதிரி சொல்லு ..
           நீ போ.. டேய், ஏன் உனக்கு இந்த வேலை- நீ வாங்கற பத்து அஞ்சு பிச்சைக்கு இது தேவைதானா ?
"ஒரு விளம்பரம்ம்ம்"

            இப்ப நான் சொல்ல வர்றதும் விளம்பரங்கள் பத்தி தாங்க.நமது தொலைக்காட்சி விளம்பரங்கள் எந்தளவுக்கு மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது, இல்லாத சில விசயத்த இருப்பதாக சொல்லி தொடர்ந்து நமது பர்சை பதம் பார்துகொண்டிருக்கிறது. ஒரு பொய்யை தொடர்ந்து பல முறை சொன்னா அதை உண்மை என்று மக்கள் நம்ப தொடங்கிவிடுவார்கள் என்பதை இந்த விளம்பர உலகம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கு.
        
           எங்க சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி நோடென்சன்னு சொல்றான் ஒருத்தன்,..டேய் ஏன்டா, ஏன் ? அப்ப மத்த சோப்பு போட்ரவங்கல்லாம் கையாள கக்கத்த சொறிஞ்சிட்டே திரியிரான்களா..ஆனா ஒன்னுடா, கடசிவரைக்கும் அந்த பத்து ஸ்கின் ப்ராப்ளம் என்னன்னு நீங்க சொல்லவே இல்லடா.



          இந்த அழகு சாதனா பொருள் விக்கறவன் இம்சைதான் இருக்கறதுலயே பேரிம்ச.இவங்க பொருள யூஸ் பண்ணா ஒரே வாரத்துல சிவப்பாயிடலாமாம் .இத நம்பி, நம்ப ஊர் மக்களெல்லாம் அத வாங்கி மூஞ்சி புல்லா பூசிகிட்டு கருப்புமில்லாம சிகப்புமாகாம ஒரு வித்தியாசமான ஜந்து மாதிரி மூஞ்சில்லாம் சொறி வந்து திரிஞ்சிக்கிட்டுருக்காங்க."சிகப்பு என்பது அழகல்ல, நிறம்" என்று இவர்களுக்கு யார்தான் புரிய வைப்பது..


          இப்ப புது டிரென்ட் என்னன்னா, நம்ம மெடிகல் அசோசியேசன் கிட்ட அங்கீகாரம் வாங்கிக்கறது. அப்பறம் மருத்துவ ரீதியா இது உடம்புக்கு நல்லது அப்டீன்னு சொல்றது. நம்மூர்ல அறிவுரைக்கு அப்பறம் ஈசியா கிடக்கறது என்ன அப்டீன்னு கேட்டீங்கன்னா, இந்த மெடிகல் அசோசியேசன் அங்கீகாரம் தான். அஞ்சோ பத்தோ கொடுத்தா நம்ம டாஸ்மார்க்ள விக்கற சரக்கு கூட லிவருக்கு நல்லதுன்னு சர்டிபிகேட் கொடுப்பாங்க.

          எனக்கு தெரிஞ்சு இந்த வேலைய முதல்ல ஆரம்பிச்சது ஹார்லிக்ஸ் தான். "டாக்டர்கள் சிபாரிசு செய்வது" அப்டீன்னு சொல்லி விறபனைய உயர்திக்கிடாங்க. ஆனா அந்த டாக்டர போய் கேட்டா, "நோ, நோ, நான் சிபாரிசு செய்யவே இல்லையேன்னு" சொல்றாரு..

        இத பாத்துட்டு காம்ப்லான்காரன்  சொல்றான் இத குடிச்சீங்கன்ன சீக்கரம் உயரம் ஆவீங்கன்னு.. எங்க மம்மியும் எனக்கு சின்ன வயசுல காம்ப்ளான் தான் குடுத்தாங்க, ஆனா நான் அஞ்சடிக்கு மேல வளரவே இல்லையே. எதுக்கும் இப்ப நாலு பாட்டில் வாங்கி ட்ரை பண்ணி பாத்துடனும்..

          ஒரு டூத்பேஸ்ட் கம்பனிகாரன், நிஜமாவே சில டென்டிஸ்ட்கள கவர் பண்ணி, தன்னிடம் வரும் பல் நோயாளிகளை அவங்க டூத்பேஸ்ட் யூஸ் பண்ண சிபாரிசு செய்ய வச்சிருக்கான். என் நண்பர் கூட அத நம்பி சில நாள் அந்த பேஸ்ட் யூஸ் பண்ணிட்டிருந்தார்.. மத்த டூத்பேஸ்ட்லாம் பத்து ரூவான்னா இவன் மட்டும் அம்பது ரூவாக்கு வித்துட்டிருந்தான் என்பது தான் இதில் கொடுமையான விஷயம்.

        மேல சொன்னது ஒரு சேம்பிள் தான். மொத்த விளம்பரத்தையும் பத்தி சொல்லனும்னா ஒரு மெகா சீரியலே எடுக்கணும். இது போன்ற போலியான விளம்பரங்களை தடுக்க நமது அரசு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது வேதனை..நாம் தான் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் விழுப்புடன் இருக்க வேண்டும்.

பின்குறிப்பு : இத்தளத்தில் உங்கள் விளம்பரங்களை இடம்பெற செய்ய அணுகவேண்டிய முகவரி ட்ரிபில்டபில்யு அட் ஈமெயில் டாட் காம். (www@email.com)

Sunday, October 21, 2012

பீட்சா - மசால் வடை பிரியர்களும் சாப்பிடலாம் !

                  தாண்டவம், மாற்றான் என்று தொடர்ந்து வந்த மாஸ் படங்கள் சொதப்பிகொண்டிருக்க, அமைதியாய் வந்து அழகாய் அசத்தியுள்ளது பீட்சா. திரு குமரன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி  கலக்கல் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் பீட்சா.

               கொட்டும் மழையில் நனைந்துகொண்டே பீட்சா சாப்டா எப்டி இருக்கும்னு தெரியாது - ஆனா இந்த பீட்சா பாக்க கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டே செல்லலாம்..ஷார்ட் பிலிம் புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பற்றி நான் சொல்வதை விட - யு ட்யுபில் நீங்களே போய் இவரது படங்களை பார்த்துகொள்ளுங்கள்.

            படத்தோட கதை என்னன்னா -"கத சரியானு மொக்க கதைங்க ஆனா நான் சொன்ன விதம் அப்டி" அப்டின்னு டைரக்டரே தில்லா சொல்லிடறாரு !    சொன்னாதோட மட்டுமில்லாம  அசத்தலான திரைகதை மூலம் அத நிரூபிச்சும் இருக்கார்.

          அதனால நாமளும் இங்க கதைய சொல்லாம விட்டுட்வோம்னு பாத்தா, கத சொல்லாம எப்டி விமர்சனம் எழுதறது.. அதனால் கதையின் சஸ்பன்ச போட்டுஉடைக்காம மேலோட்டமா கொஞ்சம் சொல்லலாம். படத்தோட ஹீரோ ஒரு சாதாரண பிஸ்ஸா சப்ளையர். அவரு ஹீரோயின் கூட ஒரு லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்றார். ரொம்ப கேர்புல்லா இருந்தும் கூட அவன் யூஸ் பண்ண காண்டம்ல இருந்த சின்ன ஓட்டல லீக்காயி ஹீரோயின் வயத்துல சைக்ளோன் பார்ம்  ஆயிடுது ..அதாங்க பேபி பார்ம்  ஆயிடுது..கல்யாணம் பண்ணிகறாங்க ..
       
             இதுக்கு இடையில ஒருநாள் பீட்சா டெலிவரி பண்ண போன வீட்ல ஹீரோ தனியா மாட்டிக்கறார்.. அங்க அடுத்தடுத்து கொலை விழுது..இதுக்கு மேல கத சொன்னா, டைரக்டர் என்ன ஓரு தனி பூத் பங்களால போட்டு அடைத்துவிடும் அபாயம் இருப்பதால் இதோட நிறுத்திக்குவோம் ..

          படத்தில் ஆரம்ப சில நிமடங்கள் கதாபாத்திரங்களை பற்றி கூற எடுத்துக்கொள்ளும் இயக்குனர், கிட்டத்தட்ட இருவதாவது நிமிடத்திலிருந்து கதைக்கு வர்றார் ..அதிலிருந்து படம் அதகளம் தான்..ஒரே இடத்தில் ஹீரோவை வைத்துகொண்டு அவர் ஆடியிருக்கும் த்ரில்லர் ஆட்டம் செம ..குறிப்பா அந்த நாப்பது நிமிட காட்சியில் ஒளிபதிவு  ஒலிபதிவு ஹீரோவின் அசத்தலான நடிப்பு நம்மை கட்டிபோடுகிறது ..

        பொதுவாக த்ரில்லர் படங்களை அமைதியாக பார்க்கும் நாம், அந்த நாற்பது நிமிட காட்சியில் கைதட்டவும்,ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்..அதுவும் இதுபோன்ற த்ரில்லர் படங்கள் என்னதான் சிறப்பாக இருந்தாலும் ரிபீட் ஆடியன்ஸ் வரவைப்பது கடினம்..இதில் பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளதால் ரிபீட் ஆடியன்ஸ் வருவார்கள் என நம்புவோம்.

        அந்த பிட்சா ஒவ்வொருதுண்டாக காணமல் போகும் போது கைதட்டலில் திரையரங்கு அலறுகிறது..பைப் மூடியபின்னும் சொட்டும் தண்ணீர், ஸ்விட்ச் ஆப் செய்தும் சுற்றும் மின்விசிறி போன்ற ட்ரேட் மார்க் த்ரில்லர் பட காட்சிகள் இல்லாதது மேலும் சிறப்பு ..

       படத்தில் இரண்டு மிகபெரிய லாஜிக் ஓட்டைகள்..திரைகதையின்  சிறப்பால் இதை மறந்துவிடலாம். சென்னையில் மிக குறைந்த திரை அரங்குகளில் ரிலீசாகியிரும் பிட்சா, ஓரிரு நாட்களில் மாற்றான் காட்சிகளை அபகரிக்கும் என நம்பலாம்.

பைனல் பன்ச் : பிட்சா - தீவாளி வரை வெடிக்கபோகும் பட்டாசு ..

Sunday, July 29, 2012

கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!.

               லிங்குசாமி  தயாரிப்பில் "மைனா" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் "கும்கி". இதன் பாடல்கள் இரு நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. சொக்க வைக்கும் மெலோடிகலாக அனைத்தும் அருமை. 


எல்லா ஊரும் எங்களுக்கு !
           படத்தின் கதையையும், நாயகனின் கதாபாத்திரத்தையும் மேலோட்டமாக சொல்லும்படி அமைந்துள்ள இந்த பாடல் கேட்டவுடனே படத்தின் காட்சியமைப்புகள் எப்படி இருக்கும் என்று நாமாக கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும், அழகான ஓபனிங் சாங்.
 
அய்யய்யய்யோ  ஆனந்தமே !(Violin and female)..
                       ஆரம்பத்தில் மிதமாக ஆரம்பிக்கும் வயலின் இசையை கேட்கும்போது உள்ளுக்கும் ஒரு ஆனந்தம் பரவுகிறது, பின்னர் அதனுடன் அதிதி பாலின் குரலும் யுகபாரதியின் வரிகளும் சேரும்போது அப்படியே பரமானந்தம். காதலன் காதலியுடன் ஒரு அழகான கேண்டில் லைட் டின்னரில், மிதமான ஒலியில் இப்பாடல் கேட்டால் ஒரு ரம்மியமான(Romantic) இரவாக அது  அவர்களுக்கு அமையும்.
 
எப்போ புள்ள சொல்ல போற :
      எங்கயோ கேட்ட மாதிரி இருந்தாலும், இதுவும் ஒரு மிதமான மெலடி !
 
சொல்லிட்டாலே அவ காதல :
        ஒரு பாடல் சிறப்பாக அமைய, ஸ்ரேயா கோஷலின் பீர் சொட்டும் குரலே போதுமானது. இதில் இசையும் வரிகளும் கூடுதல் சிறப்பை சேர்க்க, ஒரு அழகான மெலடி டூயட். 

ரசித்த வரிகள் :
     அப்பன் சொல்ல கேட்கல 
     அம்மா சொல்ல  கேட்கல
      நீ சொல்ல கேட்டேன்,
     ரெண்டு பேர நேருல பாத்தேன்,

இது வரை காதலியை தாயோட மட்டுமே ஒப்பிட்டு வந்தார்கள், இதில் தந்தையுடனும் ஒப்பிட்ட யுகபாரதியின் வரிகள் புதுசு தான !!
 
கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் !!
        "இமான் - யுகபாரதியின்" மிரட்டும் கூட்டணியில் என்று இனி இவர்கள் போட்டுகொள்ளலாம், சும்மா ரெண்டு பேரும் போட்டி போட்டு பிச்சு உதறியிருக்கிரார்கள்.. பாடலின் முதல்  வரிகளே சொல்கிறதே இதில் யுகபாரதியின் சிறப்பை, கடைசி வரி வரை அனைத்தும் அசத்தல்.  இமானும், இப்பாடலின் ஒட்டு மொத்த ஸ்கோரையும் யுகாவே தட்டி சென்றுவிடக்கூடாது என்று புது புது ஒலிகளுடன் ஒரு வித்தியாசமான இசையை தந்திருக்கிறார். FM உலகை இந்த பாடல் சில நாட்கள் ஆட்சி செய்யும் என்றால் அது மிகையல்ல ! 
 
      மேலும் இரு அழகிய பாடல்களுடன்  இதை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக்க வேணாம், கூகுளாண்டவர் உதவியை நாடவும் !

Sunday, July 8, 2012

நான் ஈ - சரவெடி பட்டாசு !!

நான் இதுவரை ஒரு படத்தை இத்தனை பேர் இவ்வளவு புகழ்ந்து எழுதி படித்ததில்லை !! பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு !!

Cable sankar : http://www.cablesankaronline.com/2012/07/eega.html

Karki : http://www.karkibava.com/2012/07/blog-post_08.html

நெல்லை நண்பன்  : http://www.nellainanban.com/2012/07/fly-that-flies-high.html

Oho production : http://ohoproduction.blogspot.in/2012/07/blog-post_07.html 

Madras bavan :  http://www.madrasbhavan.com/2012/07/blog-post_07.html

Senthil CP :  http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html

Mine : http://www.sathivenkat.blogspot.in/2012/07/blog-post.html


DONT MISS IT !!!

Saturday, July 7, 2012

நான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் !

                  மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடும் படங்கள் பல.எஸ்.எஸ்.ராஜமெளலி தெலுங்கில் மாஸ் இயக்குனர், இது வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் அங்கு மெகா ஹிட். அதில் நான் பார்த்தது மகதீரா, மரியாதை ராமண்ணா மட்டுமே. மொழியே புரியாமல் பார்த்தும், இரண்டுமே என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே  ராஜமெளலியின் தீவர விசிறியாகிவிட்டேன்.
                  நான் ஈ ட்ரைலர் பார்த்ததுமே என்னை மிரள வைத்தது. ட்ரைலர் ரிலீஸ் ஆனா நாளிலிருந்தே, ஒவ்வொரு வெள்ளியும் இந்த வாரம் ரிலீஸ் ஆயிடுச்சா என்று பார்த்துகொண்டிருந்தேன், மிக நீண்ட காத்திருப்புக்குப்பின் அந்த நாள் நேற்று வந்தது.



           கதை என்ன என்று ட்ரைலர் பார்த்த அனைவருக்கும் தெரியும்.  தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன்.காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை.
                பல முறை பார்த்து புளித்துபோன சாதாரண பழி வாங்கும் கதை தான்.  ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் நம்மை கட்டிபோட்டு கலக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுவதும் சீட்டின் நுனியில் அமர்ந்தே படத்தை ரசித்தேன்.
             இது போன்ற காதல் மையமாக உள்ள படங்களில், காதலில் ஆழம் மிக முக்கியம். ஹீரோ ஹீரோயின் இருவருக்குமிடையே நடக்கும் காதல் காட்சிகளுக்கு நேரம் ஒதுக்க இயக்குனருக்கு கிடைத்து கிட்டத்தட்ட 15  நிமிடங்கள் மட்டுமே. படம் ஆரம்பித்த அரை மணிக்குள் ஹீரோ வில்லனால் கொல்லபடுகிறார். கிடைத்த 15  நிமிடத்தில் இவர்களின் காதலை முடிந்தவரை அழுத்தமாக சொல்லியிருக்கிறார், குறிப்பாக கண்களிலே சொல்லும் சமந்தாவின் காதல் அழகு.
                   ஒரு சாதாரண  ஈ , மனிதனை அதிகபட்சம் எந்தளவுக்கு இம்சிக்க முடியும் ? காதுகளில் வந்து ரீங்காரம் மட்டுமே இசைக்க முடியும். படத்தில் பல இடங்களில் மிகபெரிய லாஜிக் ஓட்டைக்கு வாய்பிருந்தும் , முடிந்தளவு அனைத்து காட்சிகளிலும் லாஜிக்காக நம்ப வைத்திருக்கிறார், என்னை பொறுத்தவரை லாஜிக் ஓட்டை இல்லாமல் கமர்சியல் படங்களில் வந்ததில்லை. லாஜிக் மீறல்களை தாண்டி நம்மை கட்டிபோடும் படங்களே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தில் லாஜிக் மீறல் காட்சிகளில் கூட கைதட்டல் பெரும் அளவுக்கு திரைகதையை செதுக்கியிருக்கிறார்.
                          படத்தின் நிஜ ஹீரோ "கிராபிக்ஸ்", "பின்னணி இசை", "வில்லன்", மற்றும் "சமந்தா".  எந்திரன் கிராபிக்ஸ் ஏற்படுத்தாத பாதிப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் பாதியின் பின்னணி இசை அருமை. வில்லன் நடிப்பு அட்டகாசம், பேசும்போது மட்டும் நாம் டப்பிங் படம் பார்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது, சமந்தாவும் அழகாக வந்து  அழகான முக பாவனைகளில் நம்மை கவர்கிறார். கார்கியின் வரிகளில் இரு பாடல்கள் நலம். வசனம் கிரேசி மோகன், ஓரிரு இடங்களை தவிர, அவரின் வழக்கமான சாயல் இல்லாமல் சிறப்பாகவே இருக்கிறது. 

            பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!