" பொன்மாலை பொழுது " - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன்
அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின் இசையில் இதன்
பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
எந்திரனிலும், அஸ்க் லஸ்காவிலும் ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி "பு"க்கு பிறந்தது "பூ"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்திலும் கார்கி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். சில இடங்களில் இசையின் இரைச்சலால் வரிகள் புரியாமல் போனாலும், சிறப்பாகவே இசை அமைத்திருக்கிறார் சத்யா.
வாற்கோதுமைக்கள் ::
வாரக்கடைசியை கொண்டாட போகும்போது ஒரு இளமை துள்ளும் பாடலி இயக்குனர் கேட்க, அதுவும் நல்ல தமிழ் வரிகளாய் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரியப்பட, பாடலின் ஆரம்ப வார்த்தையே வாற்கோதுமைக்கள். இதுவரை பீருக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு யாரவது யோசிச்சிருகான்களா தெரியல, கார்கி அழகாக அதை வாற்கோதுமைக்கள் என்று தமிழ்படுத்திருக்கிறார் . இதில் நம்மை கவரும் வரிகள் சில ..
எந்திரனிலும், அஸ்க் லஸ்காவிலும் ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி "பு"க்கு பிறந்தது "பூ"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்திலும் கார்கி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். சில இடங்களில் இசையின் இரைச்சலால் வரிகள் புரியாமல் போனாலும், சிறப்பாகவே இசை அமைத்திருக்கிறார் சத்யா.
வாற்கோதுமைக்கள் ::
வாரக்கடைசியை கொண்டாட போகும்போது ஒரு இளமை துள்ளும் பாடலி இயக்குனர் கேட்க, அதுவும் நல்ல தமிழ் வரிகளாய் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரியப்பட, பாடலின் ஆரம்ப வார்த்தையே வாற்கோதுமைக்கள். இதுவரை பீருக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு யாரவது யோசிச்சிருகான்களா தெரியல, கார்கி அழகாக அதை வாற்கோதுமைக்கள் என்று தமிழ்படுத்திருக்கிறார் . இதில் நம்மை கவரும் வரிகள் சில ..
வாற்கோதுமைக் கள்ளோடு
வா தோழனே என்னோடு
ஊர்விட்டோடி காற்றை சுவாசிக்கலாம்
கோப்புகளோடு கொட்டிய குப்பை
கோப்பைகள் முட்டி மறந்திடுவோம்!
பகலிரவைந்தும் நிகழ்த்திய தப்பை
ஓரிரு நாட்கள் துறந்திடுவோம்!
நீ இன்றி கிடக்கும் :
என்னை மிகவும் கவர்ந்த பாடல், அந்தாதி ஸ்டைலில், முதல் வரியின் கடைசி வார்த்தையில் அடுத்த வரியின் முதல் வார்த்தையாய் துவங்கி அசத்தியிருப்பார். இதில் இசையும் அருமை. "ஏன் பாட்டைநிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் கரைய ஓடோடி வந்திருக்கும் என்னை பார்த்ததும், ஏன் நிறுத்திவிட்டாய், பாடு சாந்தா, பாடு " என்று ஒரு பழைய பாடலில் கூறுவது போல், இந்த பாடல் இரண்டே நிமிடத்தில் முடிந்துவிடுவது மிகுந்த ஏமாற்றம்"
என்னை மிகவும் கவர்ந்த பாடல், அந்தாதி ஸ்டைலில், முதல் வரியின் கடைசி வார்த்தையில் அடுத்த வரியின் முதல் வார்த்தையாய் துவங்கி அசத்தியிருப்பார். இதில் இசையும் அருமை. "ஏன் பாட்டைநிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் கரைய ஓடோடி வந்திருக்கும் என்னை பார்த்ததும், ஏன் நிறுத்திவிட்டாய், பாடு சாந்தா, பாடு " என்று ஒரு பழைய பாடலில் கூறுவது போல், இந்த பாடல் இரண்டே நிமிடத்தில் முடிந்துவிடுவது மிகுந்த ஏமாற்றம்"
ரசித்த வரிகள்:
நீ இன்றி கிடக்கும் இருக்கை அருகே
நெஞ்சம் ஏனோ தவழுது
தவளை கிணறாய் சுருங்கும் உலகம்
கொஞ்சம் மெதுவாய் சுழலுது
சுழலின் உள்ளே உறங்கும் மீனாய்
வகுப்பில் நானும் இருக்கிறேன்
அடிகடி முடி களைவதில் :
இந்த பாடலில் நம்மை ஈர்ப்பவர் இசை அமைப்பாளர். அழகான மெலடி கலந்த பீட் ..
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
இடை தீர்ந்த போதும் அட காண்கிறேன்
மெல்ல மெலிகிறேன்
கொஞ்சம் உறைகிறேன்
இதழ் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
Reebokல ஸ்கூல சுத்துற:
கல்லூரி பெண்கள் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில், கார்கியின் வரிகள் அருமையோ அருமை. facebook twitter என்று கரண்ட் ட்ரெண்டை அழகாக உபயோகபடுதிருப்பார்.
ரசித்த வரிகள்:
ATM கார்டுக்கும்
boyfriend ஆகும் லூசுக்கும்
வித்தியாசம் என்னென்னென்னு பாப்போம்
ஷாப்பிங் மால் கூட்டிப்போய்
வெக்கமெல்லாம் இல்லாம
mannequin போட்டதெல்லாம் கேப்போம்
பாடகளை டவுன்லோட் செய்ய :
கல்லூரி பெண்கள் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில், கார்கியின் வரிகள் அருமையோ அருமை. facebook twitter என்று கரண்ட் ட்ரெண்டை அழகாக உபயோகபடுதிருப்பார்.
ரசித்த வரிகள்:
ATM கார்டுக்கும்
boyfriend ஆகும் லூசுக்கும்
வித்தியாசம் என்னென்னென்னு பாப்போம்
ஷாப்பிங் மால் கூட்டிப்போய்
வெக்கமெல்லாம் இல்லாம
mannequin போட்டதெல்லாம் கேப்போம்
பாடகளை டவுன்லோட் செய்ய :
Just realised only 3 songs were written by Madhan Kaarki..Reebokல ஸ்கூல சுத்துற, வாற்கோதுமைக்கள் & நீ இன்றி கிடக்கும்..
ReplyDelete