Thursday, February 23, 2012

MLAவின் மின்சார தந்திரம் !!

   தனது கணவரின் ரூம் கதவை பல முறை தட்டியபின்னும், உள்ளிருந்து ஒரு அசைவும் வராததால், பதட்டமடைந்த மீனாட்சி, உறங்கிகொண்டிருந்த தனது மகனை எழுப்பி அழைத்து வந்தாள். மகன், சற்றுநேரம் முயற்சித்துபார்துவிட்டு, கதவை உடைக்க முடிவு செய்தான். வேலை ஆட்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே தூக்கில் தொங்கிகொண்டிருந்தார் MLA  ராஜரத்தினம்.
      செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஊரே ஒன்று கூடி அவர் வீட்டு வாசலை முற்றுகை இட்டது ..கடந்த 30 வருஷமா அவர்தான் அந்த ஊரோட MLA, சுயேட்சை MLA  ! எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஊருக்கு அவர் தான் MLA ! ஆனா அவர், ஒரு தடவ கூட ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு போனதே இல்ல. வேட்புமனு தாக்கல் பண்ணிட்டு வீட்டுக்கு போனார்னா, வெற்றி சேதி கேட்ட பிறகுதான் வீட்ட விட்டு வெளிய வருவார். அடுத்த 5 வருஷமும், வீடு வீடா போய், மக்கள் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார். சில ஊர் மக்களுக்கு, அவங்க ஊர் MLA யாருன்னே தெரியாது. ஆனா இந்த MLA க்கு, அந்த ஊர் மக்கள் எல்லாரையும் தெரியும்.  
         அவுருக்கு சொத்துன்னு இருக்கறது, அவரோட வீடும், கொஞ்சம்  நிலமும் தான். சட்டசபை கூடும் நாட்கள் தவிர, மீதி  நாட்கள் எல்லாம், அந்த ஊர விட்டு எங்கயும் போனது கிடையாது. தன்னோட டூ வீலர்லதான், ஊர் முழுக்க வலம் வருவார். கண்ணில் படும் குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு உடனே தீர்க்க வழி காணுவார். அந்த ஊர்ல தண்ணி பிரச்சன கிடையாது, போகுவரத்து பிரச்சன கிடையாது, குண்டும் குழியுமா  ஒரு  ரோட பாக்க முடியாது.
         படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி, சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்தார். ஒரு காலத்தில் கோடீஸ்வர ஜாமீன், இன்றோ அனைத்தையும் பொது மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். வீட்டில் இவருக்கு எல்லாமே  இவரது மனைவிதான். ஒரே மகன் விவசாயம் படித்துவிட்டு, நிலங்களை கவனித்து கொள்கிறான். இப்படி எல்லாமே சிறப்பா அமைந்த இவரோட வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமதான் போய் கிட்டிருந்தது.
        ஆனா, கடந்த ஒரு வருஷாமா இவர பாதித்த ஒரே விஷயம் மின்வெட்டு. தினம் நடக்கும் பத்து மணி நேர மின்வெட்டால் அந்த ஊர் மக்கள் படும் துன்பத்தை இவரால் தாங்க முடியவில்லை. பல சிறு தொழில்கள் நடத்த முடியாம போய் ஒவ்வொன்னா மூடும் நிலையில் இருந்தது. இவர் சிறுவனாக இருந்த பொழுது இவரின் நண்பர்கள் பலர் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்து வந்தனர். ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ அந்த வெளிச்சம் கூட கிட்டாத நிலை. இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சை வேறு வருகிறதென்ற கவலை, இவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.
      இதனால் மிகவும் வருந்தியவருக்கு , ஒரு வாரம் முன்பு இவர் கேள்விப்பட்ட செய்தி, இவரை மிகவும் சிந்திக்க வைத்தது. இரண்டு நாட்களாக, தனிமையில் கிடந்து யோசித்தவர்க்கு, இந்த முடிவுதான்  சரியென பட்டது !!
       வீட்டின் நடு கூடத்தில், கிடத்தியிருந்த இவரின் உடலுக்கு ஊரே ஓன்று கூடி இறுதி அஞ்சலி செலுத்திகொண்டிருந்தது. அருகே, அழுது அழுது சிவந்த கண்களுடன் இவரது மனைவி மீனாட்சி. அந்த கண்களில், அந்த சோகத்தையும் மீறி ஒரு பெருமிதம். மேலே, மின்விசிறி  சுழன்றுகொண்டிருக்க தனது கணவரை பெருமை போங்க பார்த்த மீனாட்சிக்கு, நேற்று தன் கணவர் கூறியது மனதில் ஓடியது..
  "நான் செத்தாதான், இந்த ஊருக்கு கொஞ்ச நாளாவது கரண்ட்டு வரும் மீனாட்சி"

செய்தி: சங்கரன்கோவில் இடைதேர்தலை முன்னிட்டு, அங்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ரகசிய உத்தரவு !!

இதே கதை, வேறு கோணத்தில் !

ஏலே, முருகா, பயங்கரமா வேர்க்குது பார், Fan அ போடுறா ..
ஐய்யா, கரண்ட் இல்ல ஐய்யா.
ஆஹா, கரண்ட் இல்லையா, சரி, அருவாள எடு, நம்ம ஊர் MLAவ போடு.
ஐய்யா ?
போடுராங்கரேன் !!
ஐய்யா, MLAவ, போட்டாச்சு ஐய்யா !!
இப்ப போடுறா, Fan ஸ்விட்ச !
போட்டச்சுயா !!
சுத்துதா ?
சுத்துதுயா !!
Moral of the story : ஒரு ஊருக்கே கரண்ட் வருதுன்னா, ஒரு MLAவ போடறதுல தப்பேஇல்ல !!


கும்பிபாகம் !!

5  நிமிஷம் கரண்ட் கட் பண்ணா தப்பா ?
தப்பேஇல்ல !
அஞ்சு அஞ்சு நிமிஷமா, அம்பத்தஞ்சு நாள் கட் பண்ணா ?
தப்பு மாதிரி தாங்க தெரியுது !
அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம், 5 மணிநேரம்,  555  நாள் கட்பண்ணா ?
ரொம்ப தப்புங்க !!
இதுக்கு கருட புராணத்துல என்ன தண்டன தெரியுமா ? பத்த வைடா அடுப்ப, ஊத்துடா என்னைய, வறுடா இவன !!

No comments:

Post a Comment