Monday, March 12, 2012

சாத்தான்களின் வேதம் !!

          "ஊருக்குள்ள ஒரு ஜாதி கலவரத்த நாமளே தூண்டி விடனும், அத அடக்க ஒரு கமிட்டிய போடணும், அதுக்கு நானே தலைவன் ஆகணும்" - அமைதிபடை படத்தில் சத்யராஜ் பேசும் ஒரு வசனம்.
          அடடே, சமைச்ச ஆட, இலைல வச்சி சாப்பிடுவீங்க, சாப்டதுக்கப்பரம் அந்த இலைய ஆட்டுக்கே போடுவீங்க, என்னே மனித நேயமடா !! - விவேக் ஒரு படத்தில் பேசும் நகைச்சுவை வசனம்.   
         நேற்று விஜய் டிவியில், நீயா நானா பார்க்கும்போது இதெல்லாம் நினைவிற்கு வந்தது.சப்ஜெக்ட் என்னன்னா, டிவி சீரியல்கள் மக்களை, எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது ! இடையிடயே தொலைகாட்சியில் வரும் ஆபாச நிகழ்சிகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுகொண்டிருந்தது. கோபி மிகவும் சீரியசாக, தனியார் தொலைகாட்சிகள்  நமது வீட்டு வரவேற்பறைக்கே கொண்டு வரும் ஆபாசத்தை பற்றி சாடிக்கொண்டிருந்த்தார்.
           என்னை போறுத்தவரையில், விஜய் டிவி வருவதற்கு முன்பு தனியார் தொலைகாட்சிகளின் தரம் அப்படி ஒன்றும் மெட்சும்படியாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நாகரீகத்துடன், ஆபாச கலப்பில்லாமல் இருந்தது.
               தனியார் தொலைகாட்சிகளின் நிகழ்சிகளின் தரத்தை நாம் இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம். "வி முன்" , "வி பின்" - விஜய் டிவி வருவதற்கு முன், விஜய் டிவி வந்ததற்கு பின். விஜய் டிவி வரும் முன், பெரும்பாலான நிகழ்சிகள் சினிமா சார்ந்தவையாகவே இருந்தது. இதுதவிர மாலை வேலையில் சில சீரியல்களையும் ஒளிபரப்பி வந்தனர்.  
             விஜய் டிவி வந்த பின், தொலைக்காட்சி நிகழ்சிகள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. ரியாலிட்டி ஷோ, எனும் பெயரில் இவர்கள் நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் கூத்துகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜோடி நம்பர் 1 , என்னும் நிகழ்ச்சி மூலமாக,  இவர்கள்தான் முதல்தலில் ஆபாசகூத்தை நமது இல்லங்களில்  கொண்டுசேர்த்தனர். இன்று இவர்களே இதற்கு எதிரானவர்கள் போல் ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் போல் காட்டிகொல்கின்றனர். "ஆஹா, உங்கள் சமூக பொறுப்புணர்ச்சியை நினைத்தால் மெய் சிலிர்கிரேதே"
         சில நாட்கள் தூங்கிக்கிடந்த "கோடீஸ்வரன்" நிகழ்ச்சியையும் தூசி தட்டி புது பொலிவுடன் ஆரம்பித்துவிட்டனர். இதில் SMS மூலம் இவர்கள் சம்பாதித்த  கோடிகளும், கேட்கப்படும் கேள்விகளும் சமீப நாட்களாக இனைய தளங்களை  நாரடித்துகொண்டிருக்கிறது.  
         யார் கண்டார், நாளைக்கு இவர்களே "அவனா இவனா" என்றொரு நிகழ்ச்சி நடத்தி அதில் நீயா நானாவின் போலித்தனத்தையும், கோடி நிகழ்ச்சியின் தில்லுமுள்ளையும் படம் போட்டு காட்டி, கல்லா கட்டுவார்கள். அதையும் நாம் இருகரம் கூப்பி, கைதட்டி வரவேற்க இப்பொழுதே தயாராவோம் !!

No comments:

Post a Comment